சுவாதி என்றொரு தமிழ்ப்பெண் இரண்டுகால்கொண்ட நரமிருகத்தால் வெட்டப்பட்டு குத்துயிரும் குலையுயிருமாய் தாகத்திற்கு தண்ணீரும் உதவிக்காக ஒரு குரலையும் கரத்தையும் எதிர்பார்த்தும் கிடக்கையில் தமது நவதுவாரங்களையும் பொத்திக்கொண்டு வேடிக்கை பார்க்கும் மனிதர்களாய் வீரத்தமிழினமாய் நின்றிருந்தீர் அன்று. அது பயத்தாலும் அதிர்ச்சியில் உறைந்துப்போனதாலும் உதவ, நடந்த கொடூரத்தை தடுக்க நீர் முன்னே செல்லவில்லை என்று சொன்னதைக்கூட சகித்துக்கொள்ளாமல் இருக்கும் இடையிலேயே முகப்புத்தகத்தில் ஒரு பதிவு. ஒரு தமிழ்ப்பெண்ணின் சாவிலும் பாழும் சாதியைத் திணித்து சித்தரிக்கும் கேவலமான பதிவது.
வெட்டியக்கயவன் முகம் அடையாளம் கண்டறியாத நிலையிருக்கும் வேளையிலும், விபச்சார ஊடகங்களும் செத்துப்போனவள் 'தலித்' அல்லாத உயர்சாதி ஐயர் வீட்டுப்பெண் என்று செய்திகள் வெளியிட்டிருக்கும் வேளை ஒருபுறமிருக்க, நியாயம் கிடைக்க ஆதரவு தருகிறோம் எனும்பேரில் பா.ச.க்காரக் கட்சியினரும் அப்பெண்ணின் உறவினரை சந்தித்து நீலிக்கண்ணீர் வடிப்பது ஒருபுறமிருக்க, "இதுவே ஒரு தலித் இனப்பெண் பாதிக்கப்பட்டிருந்தால் வந்து ஆதரவு சொல்வாயா?" எனக்கேட்கும் குள்ளநரிக்கூட்டம் மறுபக்கம். இதுவா நீங்கள் அரசியல் செய்யும் மேடை ??? நான் தெரியாமத்தான் கேட்கிறேன், எவனும் அவனவன் மக்களுக்குனு அநியாயம்னு நடந்தாதான் வாய்க்கிழிய பேசுவீங்களா?? குரல் கொடுப்பீங்களா? இப்படி சாவிலையும் அரசியல் செய்யும் கேவலமான கீழ்பிறவிகள் இருக்கும்வரை தமிழ்நாடு உருப்படவே உருப்படாது. செத்தவள் ஒரு தமிழச்சி இல்லையா? உண்மையான தமிழா நீ, காரி உமிழவேண்டாமா இவர்களது முகத்தில்.!
கண்டிப்பாக நமது காவலர்கள் பிடித்துவிடுவார்கள் அந்த கொடூரக்கொலை செய்த கோளையை. என்ன செய்துவிடப்போகிறார்கள்??? அவனுக்கும் நாளை இஸட் பாதுகாப்புப்போட்டு நீதிமன்றத்திற்க்கும் காவல்வைப்பிற்க்கும் ராச மரியாதையோடு கூட்டிவந்து செல்வார்கள். இந்திய பெரும் அரசியல் சட்டத்தின்முன் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று வாய்சடால் பேசும் பிணந்தின்னிகளும் பணம்பார்க்கும் வேலையில் இறங்கும். விளைவு, கொலையாளி மனநிலைப்பாதிப்பில் இருந்ததாலே கொலை செய்துவிட்டார் என்றும், சட்டப்படி இது கொலையே ஆகாது என்றும் வாதாட ஒரு அணியும் நாளை வரும். இப்போது வாய்ப்பொத்தி மூடிக்கொண்டிருக்கும் மாதர்சங்கமும் அப்போது திடீர்விஜயமாய் போர்க்கொடி தூக்கும், அதுவும் அரசியலுக்காகத்தான். போங்கடா உங்கள் அரசியலும் சட்டங்களும். தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் தான், தவறுகளை குறைக்க முடியும். இங்கு அரபுநாட்டுச்சட்டம் மட்டுமே தேவை!
வெட்டியவனைப் பிடித்து நடுசாலையில் வைத்து அவனது உணர்ச்சியெழும் நடுநரம்பை வெட்டி எறிய அரசாங்கம் முன்வந்து சட்டமும் இயற்றிடமுன் வரவேண்டும். முடியாவிட்டால், எத்தனையோ என்கொயர் என்கவுண்டர் என்ற பெயரில் பல அப்பாவிகளைக் கொலைசெய்ததை போன்று, நல்லதீர்ப்பிற்காக இந்த சைக்கோ கொலையாளியை ஓடவிட்டு போட்டுத்தள்ள வேண்டும். முடியுமா உங்களால்??? கழிசடைகள் அல்லவா, அதற்கெல்லாம் திராணியும் கிடையாது அதோடு இவர்களுக்கு அவசியமும் கிடையாது. கருமமடா. எந்தமாதிரியான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றே தெரியவில்லை.
மாதர் தம்மை இழிவு செய்திடும் மடமை ஒழிந்திடல் வேண்டும் என்று அன்றே முண்டாசுக்கட்டியவன் சொல்லிச்சென்றான். இன்று அவனிருந்திருந்தால் வெட்டியக்கையினையும் இதனை அரசியல்செய்யும் வாய்களையும் தீயீட்டியினால் பொசிக்கியிருப்பான். பாடியுமிருப்பான் "எம்குல தமிழ்ப்பெண்ணின் சாவில் உதிரங்குடிக்கும் எச்சை நீயா தமிழன்?" என்று.
நெஞ்சுப்பொறுக்குதில்லையே, இந்த நிலைக்கெட்ட மனிதர்களை நினைத்துவிட்டால் நெஞ்சுப்பொறுக்குதில்லையே.
27-06-2016





